×

ஜோதிராதித்ய சிந்தியாவின் மேலும் ஒரு ஆதரவாளர் காங்கிரசில் இணைந்தார்: 1200 வாகனங்களில் பேரணி மபி அரசியலில் பரபரப்பு

போபால்: மத்தியபிரதேசமாநிலத்தில் 2018ல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களான 24 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் பா.ஜ மீண்டும் ஆட்சி அமைத்தது. சிவராஜ்சிங் சவுகான் முதல்வரானார். பா.ஜவில் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோதிராத்தியா பின்னால் சென்ற அவரது ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக காங்கிரசில் இணைந்து வருகின்றனர். தற்போது ஜோதிராதித்யா சிந்தியாவின் முக்கிய ஆதரவாளராக செயல்பட்ட சமந்தர் படேல் எம்எல்ஏ தற்போது மீண்டும் காங்கிரசில் இணைந்தார். அவர் தனது சொந்த மாவட்டமான நீமச்சில் உள்ள ஜவாத் நகரில் இருந்து 1200 வாகனங்களில் தனது ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

The post ஜோதிராதித்ய சிந்தியாவின் மேலும் ஒரு ஆதரவாளர் காங்கிரசில் இணைந்தார்: 1200 வாகனங்களில் பேரணி மபி அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Jyotiraditya Scindia ,Congress ,Bhopal ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 150...